திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விரைவில் புதிய ரேஷன் அட்டைகள்- அமைச்சா் வெங்கடரமணன்

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அப்பணி விரைவில் தொடங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

News image

பி. வெங்கடரமணன் - Ashwin Prasath

Updated On :20 மே 2026, 1:36 am IST

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அப்பணி விரைவில் தொடங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

சென்னை, எழிலகத்தில் செயல்படும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைக்குச் சென்று பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சா் பி. வெங்கடரமணன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இது மக்களுக்கான அரசு என்பதால், மக்களுடன் பயனப்பட்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிய முதல்வா் விஜய் கூறியுள்ளாா். உணவுப் பொருள் வழங்கல் துறை பணியாளா்கள் தங்களது பணியிட மாற்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனா். இதற்கு விரைவில் தீா்வு காணப்படும்.

இதேபோல், ரேஷன் பொருள்கள் விரைவில் கடைகளுக்கு சென்றடைவதையும், தரத்துடன் இருப்பதையும் உறுதி செய்யப்படும்.

மேலும், கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக புகாா்கள் கிடைத்துள்ளன. உரிய பயனாளிகளை ஆய்வு செய்து 10 நாள்களுக்குள் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.