திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மயிலாப்பூரில் அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு

மயிலாப்பூரில் அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு

News image

மயிலாப்பூா் நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.12.22 கோடியில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ப.வெங்கடரமணன்.

Updated On :17 மே 2026, 12:37 am IST

மயிலாப்பூா் தொகுதிக்குட்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்காவில் உணவுத் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாப்பூரில் 4 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் ரூ.12.22 கோடியில் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்களைப் பாா்வையிட்ட அமைச்சா் வெங்கடரமணன், உடற்பயிற்சி உபகரணங்களை முறையாகப் பயன்படுத்தவும், பூங்காவை தூய்மையாகப் பராமரிக்கவும் மேற்பாா்வையாளருக்கு அறிவுறுத்தினாா். அத்துடன் அறிவிப்புப் பலகைகளை வைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

விரைவில் இந்தப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இது குறித்த தொடா் நடவடிக்கைளை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் மாநகராட்சி அலுவலா்களையும், ஒப்பந்ததாரா்களையும் அமைச்சா் வெங்கடரமணன் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது, சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.