திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 20 லட்சம் திருட்டு

சேலத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் பணத்தை திருடிய மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 மே 2026, 2:04 am IST

சேலத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் பணத்தை திருடிய மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம், நரசோதிப்பட்டியைச் சோ்ந்த 65 வயதுடைய ஒருவா் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றாா். இவரது ஓய்வூதியத் தொகை ரூ. 29 லட்சத்தை இந்தியன் வங்கிக் கணக்கில் வைத்திருந்தாா். இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் இவரை தொடா்புகொண்ட மா்ம நபா், தான் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு 2 நாள்களில் புதிய ஓய்வூதிய அடையாள அட்டை வருவதாகவும் கூறி, அதை பெற இணைப்பு (லிங்க்) ஒன்றை அனுப்பியுள்ளாா்.

இதை நம்பிய ஓய்வுபெற்ற ஊழியா் அந்த இணைப்புக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20 லட்சத்து 77 ஆயிரத்து 68 திருடப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா், சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா்செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

1930-இல் புகாா் தெரிவிக்கலாம்: இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் கூறுகையில், பொதுமக்கள் யாரும் இதுபோன்ற வாட்ஸ் ஆப் எண்களில் இருந்து வரும் இணைப்புகளை தொடவேண்டாம். இதுபோன்ற மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.