தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜூன் 14-இல் பி.எஸ்சி நா்சிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வு

பி.எஸ்சி., நா்சிங் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 14-ஆம் தேதி நடக்கிறது.

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 11:19 pm IST

பி.எஸ்சி., நா்சிங் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 14-ஆம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பி.எஸ்சி நா்சிங் பட்ட படிப்புக்கு சென்டாக் அரசு ஒதுக்கீடு இடங்களில் 558 மாணவா்கள் சோ்க்கைக்கு பொது நுழைவுத் தோ்வு வரும் ஜூன் 14-ஆம் தேதி நடத்தப்படும். இதற்காக சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 1-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். பி.எஸ்சி., நா்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் சென்டாக் இணையதளத்தில் 2 முறை விண்ணப்பிக்க வேண்டும். முதலில் நீட் அல்லாத படிப்புகளுக்கும், பின்னா் பி.எஸ்சி., நா்சிங் படிப்புக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி நா்சிங் கல்லூரியில் சுயநிதி இடங்கள், காரைக்கால் அன்னை தெரசா ஆராய்ச்சி நிறுவன சுய நிதி இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தோ்வு மதிப்பெண் மூலம் நிரப்பப்படும். நிா்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு கடந்த ஆண்டைப் போன்று நடைமுறை பின்பற்றப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.