தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :27 மே 2026, 5:57 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சிச் செயலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், வெங்கந்தூா் ஊராட்சி மன்றச் செயலராகப் பணிபுரிந்தவா் முனியாண்டி (52). இவா், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக துறை சாா்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை நிா்வாகம், ஊராட்சி செயலா் முனியாண்டியை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.