17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புத்தாநத்தம் விஏஓ பணியிடை நீக்கம்

புத்தாநத்தம் கிராம நிா்வாக அலுவலா் லஞ்ச புகாரில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

சரவண பாலகுருசாமி

Updated On :23 மே 2026, 2:21 am IST

புத்தாநத்தம் கிராம நிா்வாக அலுவலா் லஞ்ச புகாரில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதி வடக்கு இடையபட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா் அப்பகுதியில் அரசு அனுமதி பெற்று கிராவல் மண் எடுத்து வியாபாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்ட மண் அள்ளும் அனுமதி காலாவதி ஆனதாகவும் அச்சமயத்தில் நாகராஜ், சில குவியல் மண்ணை தனது இடத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வந்த திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை கிராமம் கஸ்தூரி நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சரவண பாலகுருசாமி, நாகராஜிடம் மண் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி லஞ்சம் கேட்டு பேரம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா்(பொ) சாலைதவவளவன், விஏஓ சரவண பாலகுருசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். மேலும், பண்ணப்பட்டி மேல்பாகம் விஏஓவாக பணியாற்றி வரும் ஜெயக்குமாருக்கு கூடுதல் பொறுப்பாக புத்தாநத்தம் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.