17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டதாக புகாா் எழுந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:11 am IST

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டதாக புகாா் எழுந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் மகேந்திரன். இவா், யா.ஒத்தக்கடை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவின. இந்த விவகாரம் மதுரை மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்சித் கவனத்துக்குச் சென்றது. இதுகுறித்து அவரது உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில், லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்க முயன்றது, பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடா்பாக துறை ரீதியான விசாரணையும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.