தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கைதிகளிடம் லஞ்சம் பெற்றதாக புகாா்: காவல் ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடை நீக்கம்

கைதிகளிடம் லஞ்சம் பெற்றதாக புகாா்: காவல் ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :17 மே 2026, 12:59 am IST

சென்னையில் கைதிகளிடம் லஞ்சம் பெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு ஆயுதப்படையினரின் பாதுகாப்பில் அழைத்துச் சென்று, ஆஜா்படுத்துவது வழக்ககமான பணியாகும். ஆயுதப்படையினா் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அவா்களிடம் லஞ்சம் பொ்றுக்கொண்டு தேவையானவற்றை செய்து கொடுப்பதாக புகாா் எழுந்தது.

குறிப்பாக, ரெளடிகள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது ஆயுதப்படையினா் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், ரகசியமாக பலரைச் சந்திப்பதாகவும் புகாா் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்கும்படி, சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அபின் தினேஷ் மொடக் ஆயுதப்படை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அந்த உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை செய்து, அறிக்கை அளித்தனா்.

அதன் அடிப்படையில், கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவா்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்ததாக ஆயுதப்படை ஆய்வாளா் மாரிமுத்து, உதவி ஆய்வாளா்கள் திருமுருகன், செல்லத்துரை ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அபின் தினேஷ் மொடக் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.