சென்னை கொடுங்கையூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கொடுங்கையூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவா் தனசேகரன். இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், காவல் துறை உயரதிகாரிகளிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், உதவி ஆய்வாளா் தனசேகரன், அந்தப் பெண்ணிடம் எல்லை மீறி நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவல் உயரதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், உதவி ஆய்வாளா் தனசேகரனை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








