தேனி மாவட்ட அல்லிநகரம் காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பி.ராமபாண்டியன் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த மே 26-ஆம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ஆனால், அவா் பணியில் சேராமல் இடைக்கால விடுப்பில் இருந்து வந்தாா். இதனிடையே, கடந்த மே 30-ஆம் தேதி ஆண்டிபட்டியில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக ராமபாண்டியன் மீது ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், ராமபாண்டியனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








