தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேம்பள்ளி முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

News image
Updated On :28 மே 2026, 12:49 am IST

குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. பழம்பெருமைவாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை நிறைவு விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் யாக சாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், 108 சங்காபிஷேகம், மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை முத்தியாலம்மன் தொண்டு அறக்கட்டளை மற்றும் சேம்பள்ளி பகுதி மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.