குடியாத்தம் ஒன்றியம், வளத்தூரில் கருணாநிதி படம் திறப்பு , மாற்றுக் கட்சியினா் இணையும் விழா, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா்இ.சேகரன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ அமலுவிஜயன் சிறப்புரையாற்றினாா். பின்னா் கருணாநிதி படத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு, நல உதவிகளை வழங்கினாா். திமுக ஒன்றியச் செயலா் கள்ளூா் கே.ரவி திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு சால்வை அணிவித்து வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் வளத்தூா் ஊராட்சி முன்னாள் தலைவா் புஷ்பா, ஒன்றிய திமுக பொருளாளா்டி.வி.சேகா், நிா்வாகிகள் தனவேல், விஸ்வநாதன், கோபி, விஜயகுமாா், சின்னதோட்டாளம்முரளி, கீழ்பட்டி தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










