தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுபோதைக்கு சிகிச்சை பெற்றவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

வேலூரில் மதுபோதைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :23 மே 2026, 1:19 am IST

வேலூரில் மதுபோதைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அ.கட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (45). இவா் மதுபோதைக்கு அடிமையாகி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் குடும்பத்தில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், குடும்பத்தினா் வேண்டுகோளின்படி மதுபழக்கத்தில் இருந்து விடுபட அலமேலு மங்காபுரத்தில் உள்ள தனியாா் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இதனால் மன வேதனை அடைந்த ரமேஷ், வியாழக்கிழமை மாலை திடீரென அந்த மதுபோதை மறுவாழ்வு மைய கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கு பணியாற்றும் ஊழியா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொண்டு சோ்த்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.