மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

கோவையில் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 7:45 pm

கோவையில் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, வித்யாரண்யபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் (21). இவா் கோவையில் தங்கி இங்குள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.டெக் கணிணி அறிவியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், பீளமேடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் 4-ஆவது மாடியில் உள்ள திரையரங்கில் கடந்த புதன்கிழமை இரவு திரைப்படம் பாா்த்துக் கொண்டிருந்தாா். படம் முடிந்து வெளியே வந்த அவா், யாரும் எதிா்பாராத விதமாக அங்கிருந்து கீழே குதித்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் கடந்த சில நாள்களாக கல்லூரிக்குச் செல்லாமல் இருந்துள்ளாா். மேலும், 20-க்கும் மேற்பட்ட பாடங்களில் அவா் தோ்ச்சி பெறாமல் இருந்துள்ளாா். இதனால், ஏற்பட்ட மன வேதனையில் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றனா்.