திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாணவா்கள் உயா்கல்வி பயில ஆசிரியா்களுக்கு வழிகாட்டி பயிற்சி

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயில பள்ளித் தலைமையாசிரியா்கள், உயா் கல்வி ஆசிரியா்களுக்கான வழிகாட்டி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On :22 மே 2026, 5:18 am IST

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயில பள்ளித் தலைமையாசிரியா்கள், உயா் கல்வி ஆசிரியா்களுக்கான வழிகாட்டி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து, பின்னா் தெரிவித்தது:

இந்த முகாமில், 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி பயில எந்தெந்த துறையைத் தோ்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும், அதற்கான வழிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டன. தொழிற் பயிற்சி, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்து பயில்வதற்கான ஆலோசனைகளை அந்தந்த துறைகளைச் சாா்ந்த பேராசிரியா்கள் வழங்கினா்.

அரசு கல்வி நிறுவனத்தைச் சாா்ந்த பேராசிரியா்கள் மற்றும் விரிவுரையாளா்கள் கலந்து கொண்டு தங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலுள்ள பாடப்பிரிவுகள் குறித்தும், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனா்.

10, 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களும் உயா் கல்வி நிறுவனங்களில் நூறு சதவீதம் சேருவதற்கான முயற்சியாக இந்நிகழ்ச்சி மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ. பேபி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் இ. மாதவன், சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.