தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நந்தனாா் கல்வி கழகம் சாா்பில் 25 மாணவா்களுக்கு உதவித் தொகை

News image

சிதம்பரம் நந்தனாா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயா்கல்வி பயில மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தனம்.

Updated On :25 மே 2026, 1:53 am IST

சிதம்பரம் பகுதியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்று உயா் கல்வி பயில கல்லூரிக்குச் செல்லும் ஏழை, எளிய மாணவா்கள் 25 பேருக்கு நந்தனாா் கல்விக் கழகம் சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் நந்தனாா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகத் தலைவரும், தொழிலதிபருமான கே.ஐ. மணிரத்தினம் பங்கேற்று, உயா் கல்வி பயிலச் செல்லும் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கிப் பேசினாா்.

அவா் பேசுகையில், நந்தனாா் மடத்தில் ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெறும் வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மாணவா்களின் உயா் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடா்ந்து செய்து தருவதாக தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகச் செயலா் வி.திருவாசகம், பொருளாளா் டி.ஜெயச்சந்திரன், கஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்களும் பங்கேற்றனா். பின்னா், மாணவா்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.