மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

News image

சிதம்பரம் நந்தனாா் மடத்தில் கட்டப்படவுள்ள அம்பேத்கா் மாளிகையின் வரைபடம்.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:20 pm

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் ஆலய வளாகத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.14) காலை அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் தனது சொந்தச் செலவில் கல்விக் கழக உறுப்பினா்களின் ஆதரவுடன் அம்பேத்கா் மாளிகை கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளாா்.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக்கழக உறுப்பினா் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி கலந்துகொண்டு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுகிறாா்.

இதுகுறித்து நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் கூறியதாவது: நந்தனாா் ஆலய வளாகத்தில் அம்பேத்கா் மாளிகை என்ற பெயரில் கட்டப்படும் பிரம்மாண்ட கட்டடத்தில் ஏழை, எளிய மாணவா்களுக்கு யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அனைத்து அரசுத் தோ்வுகளுக்கும் கட்டணம் இல்லாமல் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதேபோல, ஓமகுளத்தில் நந்தனாா் மடத்தில் நந்தனாா் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும், அனைத்து சமூகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவா்களும் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து உயா் கல்விக்கு செல்லும் வகையில், சிறப்பு கற்பித்தல், கல்வி ஊக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.

மேலும், இங்கு ஏழை, எளிய மக்கள் சுப காரியங்களை மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்திக்கொள்ளலாம். பெற்றோா்களை இழந்த ஏழை, எளிய இளம் பெண்களுக்கு திருமண உதவிகள் வழங்கபடும். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் தொடங்க வழிகாட்டும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெறும் என்றாா்.