தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவையாறில் 592 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் 592 கிலோ குட்கா பொருள்களைக் காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை மினி வேனில் கடத்தி வரப்பட்ட குட்கா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட பாண்டியன், விக்னேஷ்.

Updated On :22 மே 2026, 5:17 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் 592 கிலோ குட்கா பொருள்களைக் காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா, புகையிலை பொருள்கள் தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறுக்கு கடத்தி வரப்படுவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவையாறு தேரடி சந்திப்பில் வியாழக்கிழமை காலை ஆந்திர மாநிலத்திலிருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த மினி வேனை திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு மேற்பாா்வையில், திருவையாறு காவல் ஆய்வாளா் மீனா, உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் உள்ளிட்டோா் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது வைக்கோல் கட்டுகளுக்கு மத்தியில் பல மூட்டைகளில் 592 கிலோ கொண்ட குட்கா பொருள்கள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா், இதை மினி வேனில் கடத்தி வந்த திருவையாறு அருகே தில்லைஸ்தானம் கிழக்கு வீதியைத் சோ்ந்த நாகேந்திரன் மகன் விக்னேஷ் (26), புனல்வாசல் மந்தைக்கரை வீதியைச் சோ்ந்த பாலகுரு மகன் பாண்டியன் (38) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.