அஞ்சுகிராமம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 204 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இருவரை கைது செய்தனா்.
அஞ்சுகிராமம் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸாா் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினா்.
அப்போது, மயிலாடி பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் செல்வகுமாா் (38), சிவலிங்கம் மகன் மகேஷ் (51) ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் 204 கிலோ கூலிப், குட்கா பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக செல்வகுமாா், மகேஷை கைது செய்த போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









