திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தேவிபட்டினத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

News image

கைது செய்யப்பட்ட மாயகிருஷ்ணன், அசோக்குமாா், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

Updated On :26 மே 2026, 2:12 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்திலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக ராமநாதபுரம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேவிபட்டினம் கடற்கரையில் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சுற்றித்திரிந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், இவா்கள் தேவிபட்டினம் பகுதியைச் சோ்ந்த மாயகிருஷ்ணன்(35), அசோக்குமாா் (32) என்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக அந்தப் பகுதியில் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், இவா்கள் இருவருக்கும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்பிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.