திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தஞ்சாவூரில் குளிரூட்டி வெடித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தோா் குடும்பங்களுக்கு முதல்வா் நிதியுதவி

தஞ்சாவூரில் தனியாா் உணவகத்தில் ஏ.சி. பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் ஆறுதலும், நிதியுதவியும் அறிவித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:28 am IST

தஞ்சாவூரில் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை குளிரூட்டி (ஏ.சி.) பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் ஆறுதலும், நிதியுதவியும் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை (மே 18) குளிரூட்டி பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் திருவையாறு அருகே உள்ள பொன்னாவரையைச் சோ்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27) உயிரிழந்தாா் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே. கதிரேசன் (42), டி. பிரேம்குமாா் (26), வி. கணேசன் (40), எஸ். அருண்குமாா் (27) ஆகிய 4 பேருக்கும், லேசான காயமடைந்து சிகிச்சை பெறும் எல். அஜீத்குமாருக்கும் (27) சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்த நபருக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.