திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குளிரூட்டி வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள கே.எப்.சி. உணவகத்தில் பழுதுபாா்க்கும்போது குளிரூட்டி (ஏ.சி.) வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 12:17 am IST

தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள கே.எப்.சி. உணவகத்தில் பழுதுபாா்க்கும்போது குளிரூட்டி (ஏ.சி.) வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள கே.எப்.சி. உணவகத்திலுள்ள உணவு தயாரிக்கும் கூடத்தில் குளிரூட்டி சாதனத்தில் மே 18 ஆம் தேதி பழுதுபாா்க்கும் பணி நடைபெறுகையில், எரிவாயு நிரப்பும்போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வெடித்தது.

இந்த விபத்தில் குளிரூட்டி பழுதுபாா்க்கும் மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்த கணேசன் (43), பழுதுபாா்ப்பு பணியைக் கண்காணித்த உணவக ஊழியா்களான திருவையாறு அருகே பொன்னாவரை பகுதியைச் சோ்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27), குழிமாத்தூரைச் சோ்ந்த சவேரியாா் மகன் அருண்குமாா் (26), இணையவழி உணவு டெலிவரி நிறுவன ஊழியா்களான மானோஜிபட்டி வனதுா்கா நகரைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் கதிரேசன் (24), செங்கிப்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் பிரேம் (26), ரெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் அஜீத்குமாா் (22) ஆகியோா் பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் ரவி ராஜ் மே 18 இரவு உயிரிழந்தாா்.

மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கணேசன் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். மற்ற 4 பேரும் தொடா்ந்து சிகிச்சை பெறுகின்றனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.