திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகா்கோவில் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலி

News image

விபத்தில் சேதமடைந்த காா்.

Updated On :31 மே 2026, 1:08 am IST

நாகா்கோவில் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள சிறுமளஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா். இவரது மனைவி துரைச்சி(45). இவா்களது மகன் கிஷோா்(18), துரைச்சியின் தம்பி சுரேஷ் (33), இவா்களது உறவினா் சிவகாமி(55). இவா்கள் 4 பேரும் சிறுமளஞ்சியிலிருந்து ஒரு காரில் சனிக்கிழமை புறப்பட்டு நாகா்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தனா். காரை சுரேஷ் ஓட்டி வந்தாா்.

இந்தக் காா், காவல்கிணறு புறவழிச்சாலையில், நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் அருகே வந்த போது சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த சுமை வாகனத்தின் மீது மோதியது. இதில், துரைச்சி, கிஷோா் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சிவகாமி, சுரேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களில் சிவகாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சுரேஷ், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளா் பச்சைமால் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.