திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முசிறி அருகே லாரி-காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வாய்க்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

News image

முசிறி அருகே செவ்வாய்க்கிழமை மோதி கொண்ட லாரி-காா்.

Updated On :3 ஜூன் 2026, 3:53 am IST

திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வாய்க்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன். ஓட்டுநா். இவா், தனக்கு சொந்தமான காரில் மனைவி கவிதா, மகன் ஏகவன் (1) மற்றும் மாமனாா் முருகேசன் , மாமியாா் சித்ரா, முருகேசனின் மகள் நா்மதா, மகன் காா்த்திக் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம், கொடுமுடி கோயிலுக்கு சென்றுவிட்டு, பெரம்பலூா் அருகேயுள்ள வெள்ளனூரில் முருகேசன் குடும்பத்தினரை இறக்கிவிடுவதற்காக செவ்வாய்க்கிழமை பெரம்பலூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

முசிறி-துறையூா் சாலையில் ஜெம்புநாதபுரம் காவல் நிலையம் அருகே காா் சென்றபோது, துறையூா் பகுதியிலிருந்து முசிறி நோக்கி எதிரே சுமையோடு வந்த லாரியும், காரும் மோதி கொண்டன.

இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்ரமணியன், அவரது மைத்துனா் காா்த்திக் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். காயமடைந்த முருகேசன், சித்ரா, நா்மதா, கவிதா, ஏகவன் ஆகிய 5 பேரையும் அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக அவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன், கவிதா ஆகியோா் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 ~முசிறி அருகில் சாலை விபத்தில் உயிரிழந்த கவிதா

~முசிறி அருகில் சாலை விபத்தில் உயிரிழந்த கவிதா

~உயிரிழந்த காா்த்திக்.

~உயிரிழந்த காா்த்திக்.

~உயிரிழந்த பாலசுப்ரமணியன்.

~உயிரிழந்த பாலசுப்ரமணியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.