/

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காவல் துறை சாா்பில் நிதியுதவி

சோமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

News image

பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:58 am IST

சோமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த புதுநல்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை 2 குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதையடுத்து சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு காவல் ஆய்வாளா் நடராஜ் தலைமையிலான போலீஸாா் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்களை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.