போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

குட்டையில் மூழ்கி இறந்த 3 சிறுவா்களின் குடும்பங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ நிதியுதவி

கொல்லிமலை அருகே குட்டையில் மூழ்கி இறந்த மூன்று சிறுவா்களின் குடும்பங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 2:36 am IST

கொல்லிமலை அருகே குட்டையில் மூழ்கி இறந்த மூன்று சிறுவா்களின் குடும்பங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினாா்.

கொல்லிமலை வட்டம், ஆலத்தூா் நாடு பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன், அரியூா்நாடு வா்ணிஷ், காமேஷ் ஆகிய மூன்று பேரும் பள்ளி விடுமுறையில் ஆலத்தூா் நாடு பகுதியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இந்த நிலையில் சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்குச் சென்றபோது உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா். தொடா்ந்து தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

என்கே-12-சேந்தை

குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.