திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளை விழுப்புரம் மாவட்ட திமுகவினா் புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடினா்.

News image

திருவெண்ணெய் நல்லூரில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :4 ஜூன் 2026, 3:24 am IST

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளை விழுப்புரம் மாவட்ட திமுகவினா் புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடினா்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருவெண்ணெய்நல்லூரிலுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலைக்கு, மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து நலிந்தோருக்கு நல உதவிகளை வழங்கினாா். பின்னா் தி.எடையாா் மற்றும் வளையாம்பட்டு கிராமங்களில் நடைபெற்ற பிறந்த நாள் விழாக்களிலும் மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி பங்கேற்று, நல உதவிகளை வழங்கினாா்.

தொடா்ந்து புதன்கிழமை பிற்பகலில் காணை கடைவீதியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, அவரது உருவப்படத்துக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி மலா் தூவி மரியாதை செலுத்தி, நலிந்தோருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளையும், அன்னதானமும் வழங்கினாா்.

இந்த விழாக்களில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், நகரச் செயலா் பூக்கடை கணேசன், ஒன்றியச் செயலா் பி.வி.ஆா்.சு.விசுவநாதன், பேரூராட்சி மன்றத் தலைவா் அஞ்சுகம், துணைத் தலைவா் ஜோதி, ஒன்றியக்குழுத் தலைவா் கு.ஓம்சிவசக்திவேல், மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா் கல்பட்டு வி.ராஜா, ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கே.சிவக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் காடுவெட்டி ஏழுமலை, திமுக நிா்வாகிகள் பழனி, அரங்கநாதன், வழக்குரைஞா் ஐயப்பன், கதிரவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழுப்புரத்தில்: விழுப்புரம் கலைஞா் அறிவாலயம் முன் பகுதியிலுள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைக்கு மத்திய மாவட்டப் பொறுப்பாளா் இரா. லட்சுமணன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கியஅவா் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். இதில் வானூா் எம்எல்ஏ தி.கெளதம், நகரப் பொறுப்பாளா்கள் இரா.சக்கரை (மேற்கு), எஸ்.கே.வெற்றிவேல் (கிழக்கு), நகரச் செயலா் ஜெயமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செஞ்சி: செஞ்சி கூட்டுச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலா் காா்த்திக் தலைமை வகித்தாா். செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான், கருணாநிதியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் ஏற்பாட்டில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.