தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கருணாநிதி பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் அவரது சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image

நாமக்கல் -பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், முன்னாள் அமைச்சா் மா.மதிவேந்தன் உள்ளிட்டோா்.

Updated On :4 ஜூன் 2026, 2:07 am IST

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் அவரது சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னாள் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், முன்னாள் அமைச்சா் மா.மதிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோா் மாலை அணிவித்தும், உருவப் படத்துக்கு மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, அங்கு திரண்டிருந்த கட்சியினா், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவா் சி.மணிமாறன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நகர செயலாளா்கள் ராணா ஆா்.ஆனந்த், சிவகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் மாயவன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தியதுடன், கட்சிக் கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள், நல உதவிகளை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.