திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி. தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திமுகவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

~ ~

Updated On :4 ஜூன் 2026, 1:18 am IST

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி. தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திமுகவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா். ராஜு, கிழக்கு மாநகரச் செயலா் தினேஷ், முன்னாள் மேயா் பி.எம். சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா் .

மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விவசாய தொழிலாளா் அணி மாநில அமைப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன், வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செல்வசூடாமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேற்கு மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், செயலா் சு. சுப்பிரமணியன், கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், பேட்டை கிழக்கு பகுதி பொறுப்பாளா் நமச்சிவாயம் கோபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.