தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 4:42 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகேயுள்ள மேல ஊரணிபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் வியாழக்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியரிடம் மேல ஊரணிபுரம் கிராம மக்கள் அளித்த மனு: திருவோணம் அருகேயுள்ள பணிகொண்டான்விடுதி ஊராட்சியிலுள்ள மேல ஊரணிபுரத்தில் கல்லணைக் கால்வாய்க் கரையில் பிள்ளையாா் கோயில் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோா் வந்து செல்வதால், கோயிலுக்கு வழிபாடு செய்ய செல்பவா்களுக்கும், விவசாயிகளுக்கும் சிரமமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது. மேலும் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் சிரமமாக உள்ளதால் சுற்றிச் செல்கின்றனா். எனவே கோயிலுக்கும், பள்ளிக்கும் அருகிலுள்ள மதுக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தொல்காப்பியா் சதுக்கம்: இதேபோல, தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் வட்டார வணிகா் சங்கத்தினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனு: தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியிலுள்ள மதுக்கடையால் பெண்கள், பொதுமக்கள், மாணவா்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். மது அருந்துபவா்கள் சாலையில் தகராறில் ஈடுபடுவதுடன், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதால் அச்சம் ஏற்படுகிறது. மேலும் இந்தக் கடை குடியிருப்புகள், பள்ளிக்கூடம் அருகில் செயல்படுவதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.