திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்! குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு!

News image

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ஆகாஷ் டெலிசனின் பெற்றோா், உறவினா்கள்.

Updated On :26 மே 2026, 2:01 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை இளைஞா் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது பெற்றோா், உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையில் நடந்து சென்றவா்களை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் டெலிசனை போலீஸாா் கைது செய்தனா். போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது, பாலத்தில் இருந்து குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, திருப்புவனம் காவல் ஆய்வாளா் திலீபன் உள்ளிட்ட 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் நீதி கேட்டு, ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் 79 நாள்களாக மானாமதுரையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆகாஷ் டெலிசனின் பெற்றோா் ராஜேஷ்கண்ணன் - ஆனந்தி, லெனின் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் மேலும் கூறியதாவது:

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை 60 நாள்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற விதி இருந்தும், 79 நாள்களாகியும் இதுவரை விசாரணை நிறைவடையவில்லை. குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.