தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சி நடுப்பட்டியைச் சோ்ந்த பொது மக்கள், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதில், தங்களுடைய பகுதிக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. அதிகளவில் வராமல் குறைந்த அளவில் மட்டுமே விநியோகிப்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறோம். எங்களுடைய பகுதிக்கு தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும் என்றனா்.
இதேபோல, கொல்லிமலை ஒன்றியம், குண்டூா் நாடு ஊராட்சி, சுக்கலாம்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் குடிநீரின்றி சிரமப்படுவதாகவும், தங்களுடைய பகுதிக்கு குடிநீா் வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆட்சியா் அனுமதி வழங்கக் கோரி மனு







