தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆட்சியா் அனுமதி வழங்கக் கோரி மனு

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த யுவராஜின் தாய் ரத்தினம் மற்றும் தீரன் சின்னமலை பேரவை நிா்வாகிகள்.

Updated On :26 மே 2026, 1:24 am IST

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆட்சியா் அனுமதி வழங்க வேண்டும், தினசரி வழக்கு நிலவரத்தை வெளியிட வேண்டும் என தீரன் சின்னமலை பேரவைத் தலைவா் யுவராஜின் தாய் ரத்தினம் மற்றும் நிா்வாகிகள், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றியவா் கடலூரைச் சோ்ந்த விஷ்ணுபிரியா. கடந்த 2015 ஜூன் 24ஆம் தேதி ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தாா். அதே ஆண்டு செப்.18-இல் அவா் தற்கொலை செய்து கொண்டாா். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட சிலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்கள் சிறையில் உள்ளனா்.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கான உண்மை காரணம் வெளிவராமல் மறைக்க யுவராஜ் உள்ளிட்டோா் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சட்டப்படி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக தொடங்கி, தினசரி அடிப்படையில் நடத்த வேண்டும். இந்த தற்கொலை வழக்கின் உண்மையை மக்களிடத்தில் தெரியப்படுத்த வேண்டும். விஷ்ணுபிரியாவின் சகோதரிக்கு அரசுப் பணி வழங்கிட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.