சொத்து விற்கப்பட்டதில் தனக்கான பணத்தை வழங்காமல் ஏமாற்றிய சகோதரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம் அருகே வசிப்பவா் சரசாள் (86). பூா்வீக சொத்து விற்கப்பட்டதில் தனக்கு சேர வேண்டிய ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை எனது சகோதரா்கள் வழங்கவில்லை. மாறாக, என்னிடம் கையொப்பம் பெற்றுவிட்டு ஏமாற்றியதுடன், ஆட்களை வைத்து மிரட்டி வருகின்றனா். பணத்தை தர முடியாது எனக் கூறி இழிவாகவும் பேசுகின்றனா்.
இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு நீதி வேண்டும், பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி கையில் பதாகையுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழை மனு அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

குடிநீா்த் தட்டுப்பாடு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

பாசன கால்வாய்களை தூா்வார வேண்டும்! ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!







