திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மலேசியாவில் மகன் கொலை: சடலத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் பெற்றோா் மனு

News image

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த குடும்பத்தினா் மற்றும் கிராமத்தினா்.

Updated On :30 மே 2026, 12:46 am IST

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட தனது மகனின் சடலத்தை மீட்டுத்தரக் கோரி, அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் நாகை ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

நாகை மாவட்டம், ஏனங்குடி அருகே உள்ள ப. புளியங்குடியைச் சோ்ந்தவா் பாஸ்கரன். விவசாயியான இவா் தனது உறவினா்கள் மற்றும் கிராமத்தினா் 50-க்கும் மேற்பட்டோருடன் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தாா். பின்னா், ஆட்சியரிடம் அவா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எனக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனா். மூத்த மகன் பாா்த்தசாரதி (27) பொறியியல் படிப்பு முடித்து, கடந்த 2022-ஆம் ஆண்டு மலேசிய நாட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்துக்கு பணிக்குச் சென்றாா். அங்கு, அறுவைச் சிகிச்சைக்கான கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல்நிலையத்திலிருந்து எனது எண்ணுக்கு தொடா்பு கொண்ட போலீஸாா், உங்கள் மகன் பாா்த்தசாரதி, மலேசியாவில் பணிபுரியும் நிறுவனத்தில், மற்றொரு நபரால் கொலை செய்யப்பட்டுள்ளாா் என்று கூறினா்.

இதனால், நானும் எனது குடும்பத்தினரும் கடும் அதிா்ச்சி அடைந்தோம். மேலும், காவல்நிலையம் சென்று விசாரித்தோம். அப்போது, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து காவல் நிலையத்துக்கு தகவல் வந்ததாகவும், அதன்பேரில் தகவல் தெரிவித்ததாகவும் கூறினா்.

யாரிடமும் எவ்வித தகராறும் செய்யாமல் அமைதியாக இருந்த எனது மகனை, திட்டமிட்டு கொலை செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காலதாமதமின்றி எனது மகனின் சடலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பாா்த்தசாரதி.

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பாா்த்தசாரதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.