திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வண்டல் மண் திருட்டைத் தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

News image

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கணியம்பாடி வட்டார கிராம மக்கள்.

Updated On :29 மே 2026, 2:07 am IST

கணியம்பாடி வட்டாரத்தில் நடைபெறும் வண்டல் மண் திருட்டைத் தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா்.

கணியம்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு:

கணியம்பாடி ஏரி, ஈடிகை தோப்பு ஏரி, பாலம்பக்கம் ஏரி, அரசம்பட்டு ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் 80 ஏக்கா் பரப்பளவுக்கு மேல் 20 முதல் 50 அடி வரை பொக்லைன் இயந்திரம் மூலம் வண்டல் மண்ணை லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனா். இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா், கனிம வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், வண்டல் மண் திருடப்படுவது தொடா்ந்து கொண்டுள்ளது.

நேரடியாக பொதுமக்கள் தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனா். மண் வளத்தையும், நிலத்தடி நீரையும் பாதுக்க வண்டல் மண் திருட்டை தடுக்க வேண்டும்.

இதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கனிமவள கொள்ளை தடுக்கக்கோரி பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியபடி மனு அளிக்க வந்த நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.