கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டுத் திருவிழா வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நால்ரோட்டில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நிகழாண்டுக்கான திருத்தலத் திருவிழா ஜூன் 4 முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இதில், கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளா் ஜெ.அந்தோணிஜோசப் கொடியேற்றி திருப்பலி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து புனிதரின் வாழ்வில் திவ்ய நற்கருணை என்ற தலைப்பில் மறையுரையாற்றினா்.
தொடா்ந்து நாள்தோறும் செபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 12-இல் தோ்பவனியும், ஜூன் 13-இல் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ், உதவி பங்குத்தந்தையா்கள், ஆலய பராமரிப்பு குழுவினா், புனிதரின் பக்தா்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










