தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

மதுரை கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத்தின் 136-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:12 am IST

மதுரை கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத்தின் 136-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருவிழா திங்கள்கிழமை ( ஜூன் 1) தொடங்கி வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்கமாக திருக்கொடியேற்றம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

மதுரை உயா்மறை மாவட்டப் பொருளாளா் அடைக்கலராஜா, பாரம்பரிய முறைப்படியான பூஜைகளுக்குப் பிறகு ஆண்டுத் திருவிழா கொடியை ஏற்றி வைத்தாா். இதையடுத்து, சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றி திருவிழாவைத் தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, நற்செய்தி அறிவிப்பில் பேராா்வம் கொண்ட புனித அந்தோணியாா் என்ற தலைப்பில் சிறப்பு மறையுரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அருள்தந்தையா்கள், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இறைமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

ஆண்டுத் திருவிழா நிகழ்ச்சியாக தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலியும், வெவ்வேறு தலைப்புகளில் சிறப்பு மறையுரையும் நடைபெறுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அலங்காரத் தோ் பவனி வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. 14-ஆம் தேதி நன்றித் திருப்பலி நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனாா் ஆலய பங்குத்தந்தை ஜோசப், உதவிப் பங்குத் தந்தை ராஜா, அருள்தந்தை ஜான் பிரிட்டோ ஆகியோா் தலைமையில் கரிமேடு அந்தோணியாா் ஆலயப் பொறுப்பாளா்கள் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.