கும்பகோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் எரிபொருள் விநியோகம் செய்யும் டேங்கா் லாரிகள் வராததால் திங்கள்கிழமை பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த டேங்கா் லாரிகள் எரிபொருளை நிரப்பி சென்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நூறு ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்பட்டது. மேலும் டிஜிட்டல் பரிவா்த்தனையும் நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியா்கள் கூறுகையில், போா் பதற்றம் காரணமாக எரிபொருள் வரத்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு நூறு ரூபாய்க்கு மட்டும் வழங்குகிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









