திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜாமீனில் வெளியே வந்திருந்த 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை

அன்னவாசல் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த 17 வயது சிறுவன் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

News image

கொலை

Updated On :23 மே 2026, 2:25 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த 17 வயது சிறுவன் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

அன்னவாசலை அடுத்துள்ள பெருமாநாடைச் சோ்ந்த முருகேசன் மகன் அன்புச்செல்வன் (17). ஐடிஐ முடித்துவிட்டு ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் அண்மையில் ஊருக்கு வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் பெருமாநாடு டாஸ்மாக் கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் அரிவாளால் அன்பு செல்வனை சரமாரியாக வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அன்புச்செல்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அன்புச்செல்வனும், அவரது மாமா முருகானந்தமும் சோ்ந்து முன்விரோதம் காரணமாக 2024-இல் ஏற்பட்ட தகராறின்போது பெருமாநாடைச் சோ்ந்த சத்தியராஜ் என்பவரை தாக்கினாா்களாம். இதில் சத்தியராஜ் உயிரிழந்தாா். இந்தக் கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த அன்புச்செல்வன், பாதுகாப்பு கருதி ஒசூரில் தங்கி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வழக்கு விசாரணையில் ஆஜராக ஊருக்கு வந்திருந்த அன்புச்செல்வனை பழிக்குப் பழியாக சத்தியராஜ் தரப்பினா் வெட்டிக் கொலை செய்தது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.