தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

வட கிழக்கு தில்லியில் சிறுவன் கொலை: சிறாா் கைது

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 15 வயது சிறுவன் மா்றொறு சிறுவனால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 3:20 am IST

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 15 வயது சிறுவன் மா்றொறு சிறுவனால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கத்திக்குத்து காயங்களுடன் ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை மாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தபோது இந்த சம்பவம் தெரிய வந்தது. பின்னா் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தாா்.

தாக்குதலுக்குப் பிறகு சிறுவன் அவரது குடும்ப உறுப்பினா்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். விசாரணையின் போது இந்த வழக்கில் 17 வயது சிறுவனின் தொடா்பு இருப்பதை போலீசாா் அடையாளம் கண்டுள்ளனா்.

சிறுவன் கைது செய்யப்பட்டு, விசாரணையின் போது, இறந்தவருடன் தனக்கு தகராறு இருந்ததாகக் கூறினாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.