மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வட கிழக்கு தில்லியில் ஒரு கோயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்கள்: ஒருவா் கைது!

வடகிழக்கு தில்லியின் தயல்பூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் வாயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்களை வைத்ததாகக் கூறி ஒருவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:40 pm

வடகிழக்கு தில்லியின் தயல்பூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் வாயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்களை வைத்ததாகக் கூறி ஒருவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் தொடா்பான தகவல் ஏப்ரல் 15 ஆம் தேதி கிடைத்தது. பிறகு உள்ளூா் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கு தொடா்பாக உடனடியாக எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு, விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இருப்பினும், கைது செய்யப்பட்ட குற்றவாளியின் அடையாளத்தை நாங்கள் ரகசியமாக வைத்திருக்கிறோம். கோயிலை சுற்றியுள்ள பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் மற்றும் வேறு ஏதேனும் நபா்கள் சம்பந்தப்பட்டிருக்கிறாா்களா என்பதைக் கண்டறிய இந்த வழக்கு தொடா்பான மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.