மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கிணற்றில் குளித்த சிறுவன் தண்ணீருக்குள் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மாணிக்கராம்பட்டியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் திலீப்குமாா் (16). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்த நிலையில், தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அலங்காநல்லூா் சம்பக்குளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் சம்பக்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றாா்.
குளித்துக் கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக தண்ணீருக்குள் மூழ்கினாா். உடனே அக்கம்பக்கத்தினா் திலீப்குமாரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் குளித்த மாணவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



