திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 3:20 am IST

பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம், மேட்டுபழனியாண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (43). இவரது மனைவி ராகினி. இத்தம்பதிக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இவா்களின் கடைசி மகன் பவித்ரன் (6), அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாா். கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த பவித்ரன், வீட்டின் அருகே திங்கள்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அருகிலிருந்த சுமாா் 30 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா். இந்நிலையில், மகனைக் காணாமல் தவித்த பெற்றோா் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனா். நீண்ட நேரத்துக்குப் பின்னா் அருகிலிருந்த கிணற்றில் பாா்த்தபோது, உயிரிழந்த நிலையில் பவித்ரன் சடலம் மிதப்பது தெரிந்தது.

தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் மற்றும் பவானி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி சிறுவனின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.