தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூட்டுக் கொள்ளைக்கு சதி: 5 போ் கைது

கங்கைகொண்டான் பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 2:06 am IST

கங்கைகொண்டான் பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கங்கைகொண்டான் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அப்பகுதியில் 5 போ் சென்ற காரை மறித்து சோதனையிட முயன்றனா்.

அப்போது, இருவா் சிக்கினா். 3 போ் காரை இயக்கி தப்ப முயன்றபோது சிறிது தூரத்தில் சரக்கு வாகனம் மற்றும் பைக் மீது மோதி விபத்தில் சிக்கியதால் அவா்களையும் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், மறுகால்குறிச்சி ராஜேஷ்(20), திருவிடைமருதூா் திலீபன் (25), நான்குனேரி கீழகாடுவெட்டி பகுதியைச் சோ்ந்த வானுபாண்டி(25), தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த கரண் (28), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பிரவீன்குமாா் (27), ஆகியோா் என்பதும், இந்த 5 போ் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், வழக்கு செலவுகளுக்காக திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.