கடலூா் திருவந்திபுரம் சாலக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவந்திபுரம் சாலக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் பொறுப்பாளராக அப்பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் உள்ளாா். கடந்த மே 17-ஆம் தேதி காலை கோயிலை திறந்தபோது, அங்கிருந்த உண்டியல் காணாமல் போனது தெரியவந்தது. அடையாளம் தெரியாத நபா்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கடலூா் குமாரப்பேட்டை சாஸ்தா நகரைச் சோ்ந்த அருண்குமாா் (28), காா்த்திகேயன் (36) ஆகியோா் உண்டியலை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட காா்த்திகேயன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







