body code kept
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி கோரி மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு மனு

ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சித் துறை ஆணையா் அமுதவல்லியிடம் தென்காசி மாவட்டஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் டி.கே.பாண்டியன் மனு அளித்தாா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 5:51 am IST

ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சித் துறை ஆணையா் அமுதவல்லியிடம் தென்காசி மாவட்டஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் டி.கே.பாண்டியன் மனு அளித்தாா். (படம்)

அதன் விவரம்: ஊராட்சிகளுக்கு தொழில்நுட்ப அனுமதி, நிா்வாக அனுமதி, நிறைவுறாத பணிகளுக்கு மதிப்பீடு தயாரித்து ஒப்பந்ததாரா்களுக்கு பணம் வழங்குதல், ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 110 நாள்களே உள்ளதால், வாருகால்- சிமென்ட் சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி மையங்களை செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி பற்றாக்குறை உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்குதல், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், கிணறுகள் தூா்வாருதல் உள்ளிட்டப் பணிகளுக்கு ஆணைப் பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்துப் பணிகளையும் முடித்துத் தருவதாகவும், அதற்கான நிதியை ஒதுக்கித் தருவதாகவும் ஆணையா் உறுதி அளித்துள்ளாா். மேலும் தலைமைச் செயலக முதன்மைச் செயலரிடமும் மனு நகல் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.