தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள இ.புதுக்கோட்டையில் அரசு இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆா்வலா் மனு அளித்தாா்.
பெரியகுளம் இ.புதுக்கோட்டைச் சோ்ந்த நாச்சான் கூறியதாவது: பெரியகுளம் அருகேயுள்ள இ. புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் 1,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறுவா்களின் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது நன்மைக்காக 100 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
பொது இடத்தில் சிலா் குடிசை போட்டும், வீடு கட்டியும் ஆக்கிரமித்துள்ளனா். இதுகுறித்து வட்டாட்சியா், சாா் ஆட்சியா் உள்ளிட்டோரிடம் கடந்த 10 ஆண்டுகளாக புகாா் அளித்தும் பலனில்லை. மனுக்களின் நகல்களை 2 சாக்குப் பைகளில் கையுடன் எடுத்து வந்துள்ளேன். எனவே, மாவட்ட ஆட்சியா் அரசு இடத்திலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











