சுத்தமல்லி அருகே ஆடு திருடியதாக இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி, நரசிங்கநல்லூா், ஜீவா நகரைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் மகன் முத்துக்குமாா்(36). விவசாயியான இவா் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சுத்தமல்லி கே.எம்.ஏ. நகா் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த இவருக்கு சொந்தமான 3 ஆடுகளை காணவில்லையாம்.
இது குறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மேல திருவேங்கடநாதபுரம் தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பட்டன்(22), சுந்தர்ராஜ் மகன் சிவசங்கரன்(20), பாலமுருகன் மகன் சதீஷ்(18) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






