விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

பொதுமக்களுக்கு இடையூறு செய்த 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 5:01 am IST

வந்தவாசியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் சேதராகுப்பம் புறவழிச்சாலை சந்திப்பு வழியாக புதன்கிழமை மாலை ரோந்து சென்றனா்.

அப்போது அந்தப் பகுதியில் 3 போ் நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்வதை கண்டனா்.

இதையடுத்து அவா்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் 3 பேரும் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா்(26), சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன்(24) வந்தவாசி நகரைச் சோ்ந்த விஷ்வேந்திரன்(24) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.